siragadikka aasai today episode – 23-06-2025 – Full review

இன்னைக்கு எபிசோடு: எப்ப சார் கல்யாணத்த முடிப்பீங்க!

இன்னைக்கு எபிசோடுல மனோஜ், நம்ம ரோஹினியப் பாத்து **”எப்படி அம்மா போட்ட ஒரு லட்சம் fine-கு காசு கொடுக்கப்போற? அப்றம் யார்கிட்ட அந்த திருட்டு நகைய ஏமாந்தியோ, அங்கேயே போயி வாங்கிட்டு வானு சொல்லுறாப்ல அது சிட்டிகிட்ட தான் ஏமாந்துருக்கானு தெரியாது வேற, நம்ம ரோஹினிக்கு கடுப்பாகாத பின்னே? இதுல இன்னொரு “comedy” என்னன்னா, **”அத வாங்க, முத்துவையும் கூட்டிட்டு போய் வாங்கிட்டு வானு மனோஜ் சொல்றாரு. அய்யய்யோ! அப்போ நீ எதுக்கு புருஷனா இருக்க? நம்ம மைண்ட் வாய்ஸ் கேட்காதா உங்களுக்கும் கேட்டுச்சா? எனக்கு அந்த சீனைப் பாத்தவுடனே, “டேய் மனோஜ், நல்லவேளை உன் பேரு ‘மனோஜ்’, ‘Man-less’ இல்லனு” தோணுச்சு.

மக்கள் mind voice மனோஜ் வீரத்துக்கு


மீனா, சீதா – கல்யாணம் மந்தாகினியா போச்சி!

இதே சமயம், நம்ம மீனாவும் சீதாவும் சீதாவுடைய “திருட்டு கல்யாணம்” பத்தி நெனச்சு feel பண்ணிட்டு இருக்காங்க. “அம்மாவுக்குத் தெரியாம பண்ண போறேன்னு சீதாவும்” **”முத்துவுக்குப் பிடிக்காத ஆள் கூட தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணப்போறோம்னு மீனாவும் feel பண்ணிட்டு இருந்தாங்க. இவங்க feel பண்ணிட்டே எபிசொட் இழுவையா இழுத்து, ரிஜிஸ்டர் ஆபிஸ் வரைக்கும் கூட்டிட்டு போய், அப்படியே எபிசோட முடிச்சிட்டாங்க.

எப்ப சார் கல்யாணத்த முடிப்பீங்க?


உங்க கருத்துக்களைச் சொல்லுங்க!

நீங்க என்ன நெனைக்குறீங்க?

  • இந்த மனோஜ் ரோகினிகிட்ட ஏமாந்தத்துக்கு முத்துவை குடித்து போய் நகைக்கு பணத்தை வாங்கிட்டு வானு சொன்னது பத்தி உங்க கருத்து என்ன?
  • சீதாவுடைய திருட்டு கல்யாணம் முடிஞ்சா வீட்ல அப்புறம் என்ன ஆகும்னு நெனைக்குறீங்க?
  • இந்த எபிசோடு பத்தி உங்க funniest comment என்ன?

கீழே கமெண்ட் பண்ணுங்க, பேசுவோம்!

siragadikka aasai today episode – 24-06-2025 – Full review

சிறகடிக்க ஆசைகள்: சீதா கல்யாணம்… திருட்டு கல்யாணமா? இல்ல, ‘திருப்புமுனை’ கல்யாணமா?!

அப்பாடா! ஒருவழியா சீதா கல்யாணம் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல, யாருக்கும் தெரியாம நடந்து முடிஞ்சிருச்சுங்க! அடடா, நம்ம ஊர்ல ஒரு பொண்ணு தனக்குப் பிடிச்சவனை கல்யாணம் பண்ண எவ்வளவு கஷ்டப்படணும்?! ‘அக்கறை’ன்ற பேர்ல சில சொந்தக்காரங்க, “இவளுக்கு ஒன்னும் தெரியாது, நாங்க பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்”னு சொல்லி, அவ இஷ்டப்பட்ட வாழ்க்கைய வாழவிடாம பண்ணிடுவாங்க. அப்புறம், பிடிக்காத வாழ்க்கையில எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சு வாழணும்… நினைச்சாலே கஷ்டமா இருக்குங்க!

எவ்ளோ தாங்க புண்படுத்துவீங்க 😭😭😭

ஆனா, இப்போல்லாம் நாம நியூஸ்ல பார்க்கிறோமே… கல்யாணம் ஆகி பத்தே நாள்ல புருஷனை போட்டுத் தள்ளுறது, இல்ல தாலி கட்டுற கடைசி நேரத்துல ‘வேண்டாம்!’னு அழுதுட்டுக் ஓடிப் போறதுன்னு… அதெல்லாம் பார்க்கும்போது, சீதா பண்ண இந்த ‘திருட்டு கல்யாணம்’ எவ்வளவோ பரவாயில்லைனு தோணுது. ஏன்னா, எங்கேயோ நல்ல வாழ்க்கையை தேடிப் போற இன்னொருத்தருக்கும் இதனால தர்மசங்கடமும் வேதனையும்தான் மிச்சம்! அதனால, இந்த ரூட் பெட்டர்!


சீரியல் ஸ்பெஷல்: கல்யாணமும், கடுப்பேத்தும் ட்விஸ்டுகளும்!

சரி, சீரியல் கதைக்கு வருவோம். வெறும் கல்யாணத்தை மட்டும் காட்னா போதுமா? நம்ம மக்களை டென்ஷன் ஆக்க வேணாமா? அதனால, இவங்க கல்யாணம் நடக்கும்போது, நம்ம முத்துவும் அங்க வந்துடுறாரு! மீனாவை பார்க்கிறார். அவ எப்படியோ சமாளிக்கிறா. அடுத்து, சீதாவோட புருஷனைப் பார்க்குறாரு முத்து! அவரும் இவரும் முறைச்சுக்கிற மாதிரி சீன் வந்துட்டே இருந்துச்சு.

முத்து போலீஸ் மாப்பிள்ளை மொறச்சிக்குற moment 😂😂😂

இப்ப சீதா வீட்டுல, சீதா அம்மா கிட்டயும் முத்து கிட்டயும் கல்யாணத்தை ஏன் இன்னும் சீதாவும் மீனாவும் மறைக்கிறாங்கன்னே தெரியல! சீரியல்ல விறுவிறுப்பு வரணும்னு கடைசி வரைக்கும் இதை இழுத்துக்கிட்டுப் போய், முத்துவை அசிங்கப்படுத்துற வரைக்கும் கொண்டு போவாங்கனு நினைக்கிறேன். அப்புறம், அந்த போலீஸ் மாப்பிள்ளைக்கும் முத்துவுக்கும் சண்டை முத்தி, ஒரு பெரிய கலவரமே நடக்கும்னு தோணுது! இந்த ட்ராக் எப்படி போகப்போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்!

siragadikka aasai today episode – 21-06-2025 – Full review

சிறகடிக்க ஆசைகள்: ஒரு செயின் சண்டையும், ஒரு லட்சம் ஃபைனும்!
என்னங்க நடக்குது இன்னைக்கு எபிசோட்ல?! “சிறகடிக்க ஆசைகள்”ன்னு பேரு வச்சுட்டு, “சங்கிலி ஆசைகள்”னு பேர் வச்சிருக்கலாமோனு தோணிச்சி! வாங்க, என்னாச்சுன்னு டீட்டெய்லா பார்ப்போம்!

நம்ம பூக்கார அம்மணி வீட்டுல பிறந்தநாள் பார்ட்டி. அங்க நம்ம விஜயா மா, ரோகிணி கொடுத்த செயின ஜாலியா போட்டு வந்து மத்த ஆண்டிஸ் எல்லாரும் கூட சேர்ந்து ஒரே குத்து ஆட்டம், கொண்டாட்டம்னு கலக்கிகிட்டு இருந்தாங்க.

ஆண்டிஸ் கெட்டப்லம் பார்க்க

அதிலும் நம்ம விஜயா அம்மா, அந்த செயினை காட்டி காட்டி கெத்தா ஆடிட்டு இருந்தாங்க… “அப்போவே தெரியும்ல, கண்டிப்பா ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை டைரக்டர் பிளான் பண்ணியிருக்காரு”ன்னு மனசுக்குள்ள ஒரு அலர்ட் மணி அடிச்சதுங்க!

அவங்க ஒருபக்கம் செயினை காட்டி காட்டி ஆட, இன்னொரு பக்கம் ஒரு சேட்டு ஃபேமிலி ஆன்ட்டி என்ட்ரி கொடுத்தாங்க. கடைசியில தெரிஞ்சது என்னன்னா, அந்த செயினோட ஒரிஜினல் ஓனர் அந்த ரெண்டாவதா வந்த சேட்டு வீட்டு ஆன்ட்டிதான்னு! அவங்ககிட்ட திருடுன செயினைதான் நம்ம ரோகிணி ஒரு லட்சத்துக்கு வாங்கி ஏமாந்திருக்காங்க!

அந்த ஆன்ட்டி நம்ம விஜயா கழுத்துல அந்த செயினை பார்த்ததும் எப்படி ஒரு முடிச்சி பாருங்க அவங்க காட்டி காட்டி ஆட அத சேட்டு ஆண்ட்டி பார்க்க “இங்கதான் இருக்கா என் தங்க சங்கிலுனு கண்டுபிடிச்சுட்டாங்க. அப்புறம் என்ன? “போலீஸை கூப்பிடட்டுமா?”ன்னு மிரட்டி, விஜயாவை அசிங்கப்படுத்தி, செயினை புடுங்கி அனுப்பிட்டாங்க.

விஜயா Mind Voice

சும்மாவே ரோகிணி மேல காண்டுல இருக்கிற நம்ம விஜயா, வீட்டுக்குப் போனதும் சும்மா இருப்பாங்களா? வெளு வெளுன்னு வெளுத்துட்டாங்க ரோகிணியை!

அங்க இருக்க நம்ம ஆளு முத்து மட்டும் சும்மா இருப்பாரா? அவரு இன்னும் கொஞ்சம் எரியுற எண்ணைல ஏத்திவிட, விஜயாவுக்கு கோவம் கொதிச்சிருச்சு. உடனே “இவளுக்கு ஃபைன் போடணும்!”ன்னு ஒரு லட்ச ரூபாய் ஃபைன் போட்டுட்டாங்க! இங்கதான் எனக்கு ஒரு டவுட்டுங்க… ஏமாந்தது ரோகிணி. ஆனா எதுக்கு திரும்ப விஜயாவுக்கு ஃபைன் கொடுக்கணும்னு மனசுக்குள்ள கேட்டுக்கிட்டேன் சீரியல் தான லாஜிக்கே இல்லனாலும் accept பண்ண வேண்டியது தான்! ஆனாலும் நம்ம விஜயா ஃபைன் போட்டுட்டாங்க. (லாஜிக்கெல்லாம் நமக்கு எதுக்கு, சீரியல்னாவே இப்படித்தானே?!).
இருந்தாலும் இன்னைக்கு எபிசொட்ல கடைசியா ரோஹிணி நல்ல சம்பவம் பண்ணி விட்டுட்டா விஜயாக்கு

விஜயா: உன்னால என்ன பண்ண முடியுமே அத பண்ணிட்ட

இந்த எபிசோடு கண்டிப்பா பாருங்க. நல்லா fun இருக்கு. பார்த்துட்டு உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க!